Saturday 18th of May 2024 11:14:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
கந்தகாடு முகாம்: கண்டியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானது!

கந்தகாடு முகாம்: கண்டியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானது!


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய கண்டியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்த குண்டசாலை தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 2671 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து தற்போது சிகிச்சையில் உள்ளவர்களது எண்ணிக்கை 659 ஆக உள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE